ஆப்நகரம்

ஓபிஎஸ் மன்னிப்பு கோரினால் மீண்டும் கட்சியில் சேர்ப்போம்: அமைச்சர் பேச்சால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என, சசிகலா ஆதரவு அமைச்சர் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 22 Feb 2017, 2:01 pm
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என, சசிகலா ஆதரவு அமைச்சர் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil we will apologize ops if he asks sorry sasikala team minister thanga tamilselvan
ஓபிஎஸ் மன்னிப்பு கோரினால் மீண்டும் கட்சியில் சேர்ப்போம்: அமைச்சர் பேச்சால் பரபரப்பு


முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டியில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை எதிர்த்து, தனித்துச் செயல்பட தொடங்கினார். இதுவரையிலும் தனித்தே செயல்படும் அவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபாவையும் தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், சசிகலாவும் சிறைக்குச் சென்றுவிட, அவரது ஆதரவுபெற்ற எடப்பாடி கே.பழனிச்சாமி புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

எனினும், ஓபிஎஸ்க்கு ஆதரவு எனக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களில், ஒரு பிரிவினர் எதிர்ப்பு அரசியலில் இறங்கியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளதால், ஓபிஎஸ் ஆதரவாளர்களை சமாதானப்படுத்த, சசிகலா தரப்பு தீர்மானித்துள்ளது.

இதை வெளிப்படுத்தும் வகையில், தமிழக அமைச்சர் தங்க தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால், மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் எனக் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், போடியில் நடைபெற்ற அதிமுக அலுவலகக் கூட்டத்தில் பேசியபோதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு மீண்டும் கட்சியில் இடம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இதே கருத்தை, மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரையும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary:
If OPS give apology letter we (ADMK) will consider him to party again: Sasikala team minister Thanga TamilSelvan speaks out.

அடுத்த செய்தி