ஆப்நகரம்

போராட்டம் நடத்தப்படும்: மணல் லாரி‌ உரிமையாளர்கள் எச்சரிக்கை

மணல் குவாரிகளை திறக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மணல் லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

TNN 29 Apr 2017, 9:38 pm
சென்னை: மணல் குவாரிகளை திறக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மணல் லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil we will conduct protest sand lorry owners warns
போராட்டம் நடத்தப்படும்: மணல் லாரி‌ உரிமையாளர்கள் எச்சரிக்கை


மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் செயல்படும். ஒன்பது மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. விழுப்புரம், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒன்பது மணல் குவாரிகள் இன்று திடீரென மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக 1 லட்சம் மணல் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு, கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு மூடப்பட்ட மணல் குவாரிகள் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மணல் லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமான முறையில் ஏராளமான மணல் குவாரிகள் செயல்படுவதாகவும், முறையான மணல் குவாரிகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளுவதாகவும் அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்ட சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவும், திமுக-வை சேர்ந்த சூர்யா வெற்றிக்கொண்டான் என்பவரும் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
We will conduct protest: Sand lorry owners warns

அடுத்த செய்தி