ஆப்நகரம்

ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ள கட்சியை மீட்கவே தர்ம யுத்தம்: பன்னீர் செல்வம்

''ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ள கட்சியை மீட்கவே இந்த தர்ம யுத்தத்தை துவக்கியுள்ளோம்'' என்று ஆர்கே நகர் தொகுதியில் நடந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார்.

TOI Contributor 24 Feb 2017, 1:28 pm
''ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ள கட்சியை மீட்கவே இந்த தர்ம யுத்தத்தை துவக்கியுள்ளோம்'' என்று ஆர்கே நகர் தொகுதியில் நடந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார்.
Samayam Tamil we will continue our war till truth prevail in ammas death ex cm panneer selvam
ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ள கட்சியை மீட்கவே தர்ம யுத்தம்: பன்னீர் செல்வம்



இந்த விழாவில் மேலும் அவர் பேசுகையில், ''பிறந்த நாளில் என் வீட்டிற்கு வர வேண்டாம். ஏழைகளின் வீடு தேடி செல்லுங்கள் என்று அம்மா கூறுவார். அந்தம்மா இன்று நம்மிடம் இல்லை. இந்தியாவிலேயே அப்படி கூடிய ஒரே உன்னத தலைவர் நம்முடைய அம்மாதான்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஆர்கே நகர் தொகுதியில் துவக்கி வைத்து பன்னீர் செல்வம் பேசியபோது, ''யாருடைய கையில் கட்சி செல்லக் கூடாது என்று அம்மா நினைத்தாரோ அவர்களது கையில் சென்று விட்டது. அம்மாவின் கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும் எதிராக ஒரு குடும்பத்தின் பிடியில் சென்றுவிட்டது. அந்த குடும்பத்தின் தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காகத் தான், மக்கள் இயக்கமாக, தொண்டர்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்று அம்மா அனைத்து சந்தர்ப்பங்களிலும் கூறி வந்தார், நடவடிக்கையும் எடுத்தார்.

அம்மாவின் மரணம் தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் தொண்டர் தீக்குளித்து இறந்தபோது மருத்துவமனையில் சென்று பார்த்தேன். அப்போது மருத்துவமனை வெளியே இருந்த ஒரு தாய் என்னிடம்ஓடி வந்து, அம்மாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். அம்மாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வர நீதி விசாரணை நடக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும்.

கட்சியையும், ஆட்சியையும் மீட்கத்தான் இந்த தர்ம யுத்தம். இதில் வெல்வது நாம்தான். சாமான்ய தொண்டனிடம் ஆட்சி வரும் வரை இந்த யுத்தம் தொடரும். அம்மா மரணத்தில் மத்திய அரசு தலையிட்டு சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பம். வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவை ஏற்பாடு செய்த ராஜேஷ், மதுசூதனன் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

we will continue our war till truth prevail in Amma's death: EX CM Panneer Selvam

அடுத்த செய்தி