ஆப்நகரம்

‘ஆட்சியமைப்பதே லட்சியம்; ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்’- சசிகலா உறுதி

‘’எனது தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது ஒன்றே எனது லட்சியம் அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்,’’ என சசிகலா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

TOI Contributor 12 Feb 2017, 9:24 pm
‘’எனது தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது ஒன்றே எனது லட்சியம் அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்,’’ என சசிகலா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
Samayam Tamil we will form the govt this is my only pledge sasikala confident
‘ஆட்சியமைப்பதே லட்சியம்; ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்’- சசிகலா உறுதி


சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இவ்வாறு சசிகலா தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ‘’நாம் அனைவரும் ஒன்றாக இருந்து, ஆளுநர் அனுமதியை பெற்று ஆட்சியமைக்க வேண்டும். நான் முதல்வராக உறுதிமொழி ஏற்றபின், முதல்வேளையாக மெரினா கடற்கரையில் உள்ள அம்மா ஜெயலலிதாவின் சமாதியில் இந்த வெற்றி சாசனத்தை சமர்ப்பிக்க வேண்டும்,’’ எனக் குறிப்பிட்டார்.

மேலும், ‘’சட்டமன்றத்தில் நமது தலைவி ஜெயலலிதாவின் புகைப்படத்தை காலாகாலத்திற்கும் வைத்து, நாம் சிறப்பான ஆட்சி நடத்த வேண்டும். அனைத்துப் பாகுபாடுகளையும் மறந்து, என்றைக்கும் ஒற்றுமையாக இருந்து, அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். ஆட்சியமைத்த கையோடு, அனைவரும் புகைப்படம் எடுத்து, அதனை இந்த வதந்தி பேசும் உலகத்திற்குக் காட்ட வேண்டும். நம் அம்மாவின் புகழ், நற்பெயரை அழிக்கச் சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறக் கூடாது. அதற்கு, அதிமுக எம்எல்ஏ.,க்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களுக்காக நான் அனைத்துப் பிரச்னைகளையும் சகித்துக்கொள்வேன். உங்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன். அம்மாவின் நல்லாட்சி தொடரச் செய்வதே நம் அனைவரின் லட்சியமாக இருக்க வேண்டும்,’’ எனவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பேசினார்.

English Summary:
We will form the Govt, will then visit Amma's memorial & take a photograph, will show it to the world then. This is our pledge: #VKSasikala

அடுத்த செய்தி