ஆப்நகரம்

அதிக வாக்குகளை சேகரிப்பவர்களுக்கு 50 ஆயிரம் பணம்: துரைமுருகன் பேச்சு

அதிக வாக்குகளை சேகரிப்பவர்களுக்கு 50 ஆயிரம் பணம் வழங்கப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Samayam Tamil 19 Mar 2019, 10:31 am
அதிக வாக்குகளை சேகரிப்பவர்களுக்கு 50 ஆயிரம் பணம் வழங்கப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Samayam Tamil durai


வேலூர் மாவட்டம் சோளிங்கர் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அசோகன் அறிமுக கூட்டம் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேட்பாளர் அசோகனை அறிமுகம் செய்து வைத்து துரைமுருகன் பேசுகையில்; சோளிங்கர் இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தல்களில் ஆட்சிமாற்றம் ஏற்படும். ஒன்று மத்தியில் ஆளும் மோடி அரசை மாற்றும் தேர்தலாகவும், இரண்டாவது தமிழகத்தில் ஆளும் அதிமுக எடப்பாடி அரசை மாற்றும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைய உள்ளது.

அரக்கோணத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் மோடியை மாற்றும் தேர்தல். மேலும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசை மாற்றும் தேர்தல் அதற்கு திமுகவினராகிய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

அதிக வாக்குகளை பெற்று தரும் திமுகவினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்குவோம் என்று கூறினார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் காந்தி, அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி