ஆப்நகரம்

தேசிய கட்சிகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம்: துணை சபாநாயகர் தம்பிதுரை

தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று பாஜக தலைவர் தமிழிசை கூறும் போது, தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்களை மட்டும் தமிழகத்தில் எப்படி வளரவிடுவோம் என்று மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

Samayam Tamil 9 Feb 2019, 4:43 pm
தேசிய கட்சிகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
Samayam Tamil thambidurai


மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: ‘திராவிட கட்சிகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று பாஜக தலைவர் தமிழிசை கூறி வருகிறார். அவர் அவ்வாறு கூறும் போது, தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்களை மட்டும் தமிழகத்தில் எப்படி வளரவிடுவோம். எங்களுக்கும் உரிமை இருக்கிறது, தன்மானம் இருக்கிறது. வருமான வரி சோதனைகளை நடத்தி மத்திய அரசு பழிவாங்கி வருகிறது. தற்போதைய சூழலில் தேசிய கட்சிகளே இல்லை. அனைத்தும் மாநில கட்சிகள் தான். தமிழகத்துக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் மட்டும் தான் கூட்டணி என்று முதல்வர் பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார்'.

இவ்வாறு தம்பிதுரை பேசினார்

அடுத்த செய்தி