ஆப்நகரம்

சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுப்போம்: மு.க. ஸ்டாலின்

''தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விட வேண்டும். நாங்கள் சூழ்நிலைப் பொறுத்து முடிவு எடுப்போம்'' என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 14 Feb 2017, 11:36 am
''தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விட வேண்டும். நாங்கள் சூழ்நிலைப் பொறுத்து முடிவு எடுப்போம்'' என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we will take decision according to the situation m k stalin
சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுப்போம்: மு.க. ஸ்டாலின்


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் கூறுகையில், ''21 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு தற்போது நிலை நாட்டப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் இனிமேல் எப்படி தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கான வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக வந்துள்ளது.

நிலையான ஆட்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கவர்னர் இனி எடுக்க வேண்டும். இதை நான் வற்புறுத்தி கேட்கிறேன்.

திமுக குறுக்கு வழியில் செல்ல விரும்பாது. சட்டமன்றத்தை கூட்டுங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் வேண்டும். சூழ்நிலையைப் பொருத்து நாங்கள் முடிவு எடுப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

we will take decision according to the situation: m.k.stalin

அடுத்த செய்தி