ஆப்நகரம்

”கட்சியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை ”- தினகரன் பேட்டி..!

'கட்சியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TNN & Agencies 5 Jun 2017, 5:56 pm
'கட்சியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we will wait for 45 days says ttv dinakaran
”கட்சியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை ”- தினகரன் பேட்டி..!


பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசிய அவர், பின்னர் சிறை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “என்னை கட்சியிலிருந்து ஒதுங்கச் சொல்லவும், கட்சியிலிருந்து நீக்கவும் பொதுச் செயலாளரைத் தவிர யாருக்கும் அதிகாரம் கிடையாது.

அமைச்சர்கள் தங்கள் சுய பயத்தினால் என்னை கட்சியிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என கூறினார்கள். கட்சியின் நலனுக்காக நானும் அதனை ஏற்றுக் கொண்டேன். ஆனால் கடந்த 45 நாட்களாக கட்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இரு அணியினரும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசுவதால் கட்சிக்குத்தான் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

சசிகலாவை சந்தித்து பேசியபோது, இரு அணிகளும் இணைவதற்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்கலாம் எனவும் அதுவரை கட்சி பலவீனப்படாமல் கவனித்து வருவோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் 60 பொறுத்துக் கொள்வோம் எனவும் அதன் பின்னை நிலைமை சுமூகமாகவில்லை எனில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் சசிகலா என்னிடம் தெரிவித்தார்.”என டிடிவி தினகரன் கூறினார்.

We will wait for 45 days , Says TTV Dinakaran

அடுத்த செய்தி