ஆப்நகரம்

அம்மாவின் தொண்டர்கள் எங்களுடன் இருப்பதால், 40 தொகுதியிலும் ஜெயிப்போம்: டிடிவி தினகரன்!

அம்மாவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், 40 தொகுதியிலும் ஜெயிப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Mar 2019, 9:54 pm
அம்மாவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், 40 தொகுதியிலும் ஜெயிப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ttv


கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குமரி வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது: தமிழக மக்களும், அம்மாவின் தொண்டர்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள், ஆகையால் 40 தொகுதிகளிலும் வெற்றிபெருவோம்.
ஆர்கே நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் பி ரதிபலிக்கும். மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால் சின்னங்களுக்கு பெரிய முக்கித்துவம் கிடையாது. அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் குக்கர் சின்னம் நிச்சயமாக எங்களுக்கு கிடைக்கும் என அவர் கூறினார்.

அடுத்த செய்தி