ஆப்நகரம்

போக்குவரத்து தொழிற்சங்கத்தின் மற்றொரு அதிரடி அறிவிப்பால் அதிர்ந்து போன பொதுமக்கள்!

தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன

Samayam Tamil 5 Jan 2018, 4:07 pm
தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
Samayam Tamil we wont call off strike until tn govt accepts our demands transport workers unions say
போக்குவரத்து தொழிற்சங்கத்தின் மற்றொரு அதிரடி அறிவிப்பால் அதிர்ந்து போன பொதுமக்கள்!


ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் அரசு அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தை தோல்வியுற்றதால் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

இந்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக நேற்றிரவு முதல், பேருந்துகள் இயங்காததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.

இந்நிலையில், அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

அடுத்த செய்தி