ஆப்நகரம்

குளச்சல் துறைமுகத்தை விட முடியாது: மோடி

குளச்சல் துறைமுகத்தை கைவிட முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

TNN 29 Jul 2016, 12:38 pm
புதுதில்லி: குளச்சல் துறைமுகத்தை கைவிட முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we wont leave kulachal harbour plan pm modi to pinarayi
குளச்சல் துறைமுகத்தை விட முடியாது: மோடி


தமிழகத்தில் குளச்சல் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதற்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், குளச்சல் துறைமுகம் அமைந்தால், விழிஞம் துறைமுகம் பாதிப்படையும். எனவே, குளச்சல் துறைமுகம் அமைக்க கூடாது என பிரதமர் மோடியை சந்தித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று வலியுறுத்தினார்.

ஆனால், அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த பிரதமர் மோடி, குளச்சல் துறைமுகத் திட்டத்தை கைவிட முடியாது என்று திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பினராயி கூறியதாவது: இனையத்தில் குளச்சல் துறைமுகத் திட்டத்தை கைவிட முடியாது என பிரதமர் கூறி விட்டார். மேலும், விழிஞம், குளச்சல் ஆகிய துறைமுகங்கள் அருகருகே அமைந்தால் அதிக வருவாய் கிடைக்கும் என்றும், இரண்டு துறைமுக வளர்ச்சிக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் கூறியதாக பினராயி தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்கள் மற்றும் ஏறத்தாழ 250 சிறிய துறைமுகங்கள் அனைத்துமே நாட்டின் இயற்கையான கடற்கரை அமைப்பின்படி சர்வதேச கப்பல் வழித்தடங்களில் இருந்து தள்ளியும், தேவையான ஆழமும் இல்லாமல் உள்ளன. எனவே, கொழும்பு, துபாய், சிங்கப்பூர் துறைமுகங்களின் உதவியுடன் இந்தியாவின் பொருட்கள் மற்றும் கன்டெய்னர்கள் பரிமாற்றம் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

அதேசமயம், குளச்சல் துறைமுகம் அதிக எடையுள்ள கப்பல்களும் வந்து செல்ல வசதியும், ஆழமும், அதற்கேற்ற அமைப்பும் கொண்டது. மேலும், குளச்சல் துறைமுகம் இந்தியாவில் மிகவும் ஆழம் உள்ளதாகவும் கடற்கரையில் 60 அடி ஆழம் உள்ள துறைமுகமாகும். குளச்சல் துறைமுகம் பூலோக ரீதியில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. எனவே, பண்டக பரிமாற்றம் செய்யும் பெருந்துறைமுகம் ஒன்று இந்தியாவின் தெற்கு கோடியில் குளச்சலில் அமைவது மிகவும் அவசியமாகிறது.

அடுத்த செய்தி