ஆப்நகரம்

மதுரையில் ஏப்ரல் 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என மதுரை மாநகர போலீஸ் கமிஷ்னர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

TNN 30 Mar 2017, 9:15 pm
மதுரை : மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என மதுரை மாநகர போலீஸ் கமிஷ்னர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil wearing helmet compulsory in madurai
மதுரையில் ஏப்ரல் 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்


ஹெல்மட் அணிவதில் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துக்களின் காயங்களிலிருந்து பாதுக்காத்துக் கொள்ளலாம். எனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என மதுரை மாநகர போலீஸ் கமிஷ்னர் சைலேஷ் குமார் யாதவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, " மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் மட்டும் ஹெல்மட் அணியாததால் விபத்துகளில் 225 பேர் பலியாகியுள்ளனர். எனவே ஹெல்மட் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்களின் ஓட்டுநர் ரத்து செய்யப்படும். 2015-ம் ஆண்டில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஹெல்மட் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்களின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

மதுரை மாநகர கமிஷ்னரின் இந்த அறிவிப்பால் அந்த மாவட்டத்தில் ஹெல்மட் விற்பனை தற்பொழுது அதிகமாகியுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் ஹெல்மட் விலையை கடைக்காரர்கள் அதிகப்பதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

wearing helmet compulsory in madurai

அடுத்த செய்தி