ஆப்நகரம்

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறையும்

தீபாவளியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 27 Oct 2016, 3:07 pm
சென்னை: தீபாவளியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil weather might be a villain for diwali celebration as rain likely to hit tamilnadu on diwali
தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறையும்


அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை, வரும் 30ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளிலும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளி நாளான அக்டோபர் 29ஆம் தேதி தமிழகத்தில் பரலாக மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை சராசரியாக பெய்யக்கூடும் அல்லது அதைவிட குறைந்த அளவில் பெய்யும். மத்தியக்கிழக்கு வங்ககடலில் மையம் கொண்டுள்ள கியான் புயல், மேற்கே நகர்ந்து வலுவிழக்கும். அப்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு மழை பரவலான மழைப்பொழிவு கிடைக்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தீபாவளி நாளில் மழை பெய்யலாம் என்பதால் இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் பட்டாசு சத்தம் சற்று குறையலாம் என்று கருதப்படுகிறது.

English Summary:
North East monsoon might be a Villain for Diwali celebration as Rain likely to hit Tamilnadu on Diwali.

வானிலை, பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம், மழை, தீபாவளி, பட்டாசு, வடகிழக்கு பருவமழை

அடுத்த செய்தி