ஆப்நகரம்

தொடர் விடுமுறை: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக, ஊட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

TNN 8 Oct 2016, 6:27 pm
தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக, ஊட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
Samayam Tamil week long holiday more tourists coming to ooty
தொடர் விடுமுறை: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்!


சனி, ஞாயிறு, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் பக்ரீத் பண்கை காரணமாக, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்துள்ளதால் நீலகிரி மாவட்டம், களை கட்டியுள்ளது. சுற்றுலா தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதேபோன்று, நீலகிரி மாவட்டத்தில் தற்போது 2வது சீசன் தொடங்கியுள்ளது. அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 3 லட்சத்திற்கும் அதிகமான மலர்கள் பூத்துக்குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இது தவிர மலர் கோபுரம், மலர் பாத்திகளில் பல வண்ண மலர்கள் கண்ணை கவர்வதாக உள்ளது. இன்காம் மேரிகோல்டு, ஆப்பிரிக்கன் மேரி கோல்டு, பேன்சி, பிகோனியா உள்ளிட்ட மலர்கள் சுற்றுலா பயணிகளை அழகாக வரவேற்கிறது.

மேலும், முதுமலையில் 3 மாத இடைவெளிக்குப் பின், நேற்று மாலை முதல் யானை சவாரி தொடங்கியுள்ளது. முகாமில் 24 வளர்ப்பு யானைகள் உள்ளன. அவைகளுக்கு மாலை நேரங்களில் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக கண்டு ரசிப்பதோடு, யானைகளில் சவாரி செல்லவும் மகிழ்ச்சியுடன் திரண்டுள்ளனர்.

அடுத்த செய்தி