தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கடந்த 14ஆம் தேதி முதல் புதிய தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது. குறிப்பாக நோய்த்தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிக்கலில் தவித்து வருவதாக கூறப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்
ஏனெனில் தொழிலை மீண்டும் தொடங்க போதிய ஆட்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. உதாரணமாக சென்னை மண்டலத்தில் உள்ள நிறுவனங்களில் வேலைகளை மீண்டும் தொடங்க நிர்வாகங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. ஆனால் பொது போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஊழியர்கள் வந்து சேர முடியாத நிலை காணப்படுகிறது. இதேபோல் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட ஊழியர்கள் இன்னும் திரும்பவில்லை.
டெல்லிக்கே ஆட்டம் காட்டும் ஓபிஎஸ்; பின்னணியில் இப்படியொரு மாஸ் பிளானா?
ஊழியர்கள் வந்து சேருவதில் சிரமம்
இதுதொடர்பாக பேசிய அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.பாலச்சந்திரன், அனைத்து தொழில் நிறுவனங்களும் ஊழியர்களை பணிக்கு அழைத்து வர தனியார் வாகனங்கள், பேருந்துகள் அல்லது வேன் ஆகியவற்றை ஏற்படுத்தி தர அரசு அறிவுறுத்தியுள்ளது. இது பெரிய அளவிலான யூனிட்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் சிறிய யூனிட்களுக்கு அது சாத்தியமில்லை. உதாரணமாக எங்கள் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்
மிக முக்கிய பிரிவுகளை கையாளும் 4 ஊழியர்கள் தாம்பரம், திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இருந்து வர வேண்டும். இவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருவது சிரமமான ஒன்றாகும். இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டாலும் அதிலும் சில சிரமங்கள் இருக்கின்றன. புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசுப் பணி மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே உரிய அடையாள அட்டைகளுடன் தொழிற்சாலை ஊழியர்களையும் அனுமதிக்க வேண்டும். ஒருவேளை பேருந்துகள் இயக்கப்பட்டால் ஊழியர்களை அடையாள அட்டைகளுடன் அனுமதித்து பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் சுகாதாரத்துறை வல்லுநர்களின் ஆலோசனைகளை மட்டுமின்றி, எங்களைப் போன்ற தொழிற்துறையினரின் ஆலோசனைகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏனெனில் தொழிலை மீண்டும் தொடங்க போதிய ஆட்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. உதாரணமாக சென்னை மண்டலத்தில் உள்ள நிறுவனங்களில் வேலைகளை மீண்டும் தொடங்க நிர்வாகங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. ஆனால் பொது போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஊழியர்கள் வந்து சேர முடியாத நிலை காணப்படுகிறது. இதேபோல் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட ஊழியர்கள் இன்னும் திரும்பவில்லை.
டெல்லிக்கே ஆட்டம் காட்டும் ஓபிஎஸ்; பின்னணியில் இப்படியொரு மாஸ் பிளானா?
ஊழியர்கள் வந்து சேருவதில் சிரமம்
இதுதொடர்பாக பேசிய அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.பாலச்சந்திரன், அனைத்து தொழில் நிறுவனங்களும் ஊழியர்களை பணிக்கு அழைத்து வர தனியார் வாகனங்கள், பேருந்துகள் அல்லது வேன் ஆகியவற்றை ஏற்படுத்தி தர அரசு அறிவுறுத்தியுள்ளது. இது பெரிய அளவிலான யூனிட்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் சிறிய யூனிட்களுக்கு அது சாத்தியமில்லை. உதாரணமாக எங்கள் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்
மிக முக்கிய பிரிவுகளை கையாளும் 4 ஊழியர்கள் தாம்பரம், திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இருந்து வர வேண்டும். இவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருவது சிரமமான ஒன்றாகும். இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டாலும் அதிலும் சில சிரமங்கள் இருக்கின்றன. புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசுப் பணி மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே உரிய அடையாள அட்டைகளுடன் தொழிற்சாலை ஊழியர்களையும் அனுமதிக்க வேண்டும். ஒருவேளை பேருந்துகள் இயக்கப்பட்டால் ஊழியர்களை அடையாள அட்டைகளுடன் அனுமதித்து பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் சுகாதாரத்துறை வல்லுநர்களின் ஆலோசனைகளை மட்டுமின்றி, எங்களைப் போன்ற தொழிற்துறையினரின் ஆலோசனைகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.