உள்ளாட்சி மன்றத்தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் நடைபெறும் இந்த தேர்தல் (டிச.27 , டிச30 ) இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது.
வாக்களிக்கப் போகிறோம். யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். என்ன சின்னத்தில் வாக்களிக்கப் போகிறோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால், வாக்களித்து நீங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி என்ன வேலை செய்யவேண்டும் என்பது தெரியுமா? அதைத்தான் இங்கே பார்க்கப்போகிறீர்கள்.
இதற்காக, கிராம ஊராட்சி அமைப்புக்கான வரையறுக்கப்பட்ட கடமைகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது. 73 ஆவது சட்டத்திருத்தத்துக்கு பின் 1994ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் பஞ்சாயத்து ராஜ் முறைமையின் நிர்வாக முறை விளக்கமாகக் கட்டமைக்கப்பட்டது. .
அதன்படி ஒரு கிராம ஊராட்சி மன்றத்தின் கடமைகள் என்பதை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று சட்டரீதியான கடமைகள், மற்றொன்று விருப்பக் கடமைகள்.
சட்டரீதியான கடமைகளாவன,
ஊராட்சிகள் சட்டம் 1994 இன், பிரிவு 110 இன் படி, கிராம ஊராட்சிகளின் முக்கியக் கடமைகளாவன,
விருப்பக் கடமைகள்:
ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை அலகு வாக்காளன் என்றால், அரசு முறையின் அடிப்படை அலகுகள் கிராம ஊராட்சிகள். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவற்றைத் தெரிந்து கொள்வது, வாக்களிக்கப் போகும் ஒவ்வொரு வாக்காளனுக்கும் அவசியமான ஒன்று...
( தகவல்கள்: கிராம ஊராட்சியின் அமைப்புமுறை, கடமைகள், வரம்புகள்,வருவாய்த் திட்ட முறைகள் உள்ளிட்ட மேலும் பல தகவல்கள் அடங்கிய தமிழக அரசின் மக்கள் சாசனம் 2019 க்கான ஆவணத்திலிருந்து )
வாக்களிக்கப் போகிறோம். யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். என்ன சின்னத்தில் வாக்களிக்கப் போகிறோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால், வாக்களித்து நீங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி என்ன வேலை செய்யவேண்டும் என்பது தெரியுமா? அதைத்தான் இங்கே பார்க்கப்போகிறீர்கள்.
இதற்காக, கிராம ஊராட்சி அமைப்புக்கான வரையறுக்கப்பட்ட கடமைகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது. 73 ஆவது சட்டத்திருத்தத்துக்கு பின் 1994ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் பஞ்சாயத்து ராஜ் முறைமையின் நிர்வாக முறை விளக்கமாகக் கட்டமைக்கப்பட்டது. .
அதன்படி ஒரு கிராம ஊராட்சி மன்றத்தின் கடமைகள் என்பதை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று சட்டரீதியான கடமைகள், மற்றொன்று விருப்பக் கடமைகள்.
சட்டரீதியான கடமைகளாவன,
ஊராட்சிகள் சட்டம் 1994 இன், பிரிவு 110 இன் படி, கிராம ஊராட்சிகளின் முக்கியக் கடமைகளாவன,
- கிராம சாலைகள், பாலங்கள், சிறு பாலங்கள், தடுப்புச்சுவர்கள் தரை பாலங்கள் அமைத்தல் மற்றும் பழுது பார்த்தல்
- அவசியமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் தெருவிளக்குகள் அமைத்தல்
- கழிவு நீர் மேலாண்மை செய்தல்
- திடக்கழிவு மேலாண்மை செய்து சுகாதாரத்தை உறுதி செய்தல்
- பொதுக் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்துதல்
- இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகளை அமைத்தல்
- சுகாதாரமான குடிநீர் வழங்குதல்
- ஊராட்சிக்கு உட்பட்ட சமுதாயச் சொத்துகளைப் பாதுகாத்தல்
- கிணறு, ஏரி,குளம், குட்டை உள்ளிட்டவற்றை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்
- அவ்வப்போது அரசு அறிக்கை வாயிலாக அறிவிக்கும் கடமைகளை நிறைவேற்றுதல்
விருப்பக் கடமைகள்:
- மரம் நட்டு பராமரித்தல்
- கிராமத்திலுள்ள சாலையோரங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்குகள் அமைத்தல் ()
- சந்தைகள் ஏற்படுத்தி பராமரித்தல்
- விழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளைக் கட்டுப்படுத்துதல்
- வாகன நிறுத்தங்கள், இறைச்சிக்கூடங்கள், படிப்பகங்கள் போன்றவற்றை ஏற்படுத்துதல்
- விளையாட்டு திடல்கள் , பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஏற்படுத்துதல்.
ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை அலகு வாக்காளன் என்றால், அரசு முறையின் அடிப்படை அலகுகள் கிராம ஊராட்சிகள். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவற்றைத் தெரிந்து கொள்வது, வாக்களிக்கப் போகும் ஒவ்வொரு வாக்காளனுக்கும் அவசியமான ஒன்று...
( தகவல்கள்: கிராம ஊராட்சியின் அமைப்புமுறை, கடமைகள், வரம்புகள்,வருவாய்த் திட்ட முறைகள் உள்ளிட்ட மேலும் பல தகவல்கள் அடங்கிய தமிழக அரசின் மக்கள் சாசனம் 2019 க்கான ஆவணத்திலிருந்து )