ஆப்நகரம்

பாஜக போடும் கேடிஆர் பிளான்: இதை மட்டும் கொடுத்துருங்க போதும்!

இடைக்கால ஜாமினில் வெளியே வந்த கே.டி.ராஜேந்திர பாலாஜியை வைத்து பாஜக சில திட்டங்களை தீட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 29 Jan 2022, 9:04 am
அதிமுக கூட்டணியில் பாஜக முக்கிய மேயர் இடங்களை தங்களுக்கு ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் பாஜக கவனம் செலுத்துகிறது.
Samayam Tamil what are the mayor seats the bjp is asking for what is the plan to keep rajendra balaji
பாஜக போடும் கேடிஆர் பிளான்: இதை மட்டும் கொடுத்துருங்க போதும்!


சூடான தேர்தல் களம்

தமிழக அரசியலில் தேர்தல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது. பிரதான எதிர்கட்சியான அதிமுக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இமாலய வெற்றி பெற வேண்டும் என திமுகவும், விட்டதை பிடிக்க வேண்டும் என்ற கணக்கில் அதிமுகவும் களமிறங்குகின்றன.

பிரதான கட்சிகள் கறார்!

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக முக்கிய மாநகராட்சி இடங்களைக் கேட்டு வருகிறது. திமுக கூட்டணியிலோ காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என பல கட்சிகள் முண்டியடிக்கின்றன. இருப்பினும் இரு பிரதான கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளிடம் கறார் காட்டியே வருகின்றன.

நயினார் சர்ச்சை பேச்சு!

அண்மையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் அதிமுகவினரை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் அண்ணாமலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தார். அதுமட்டுமல்லாமல் பாஜக தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் என கூறி சில மாநகராட்சிகளை கேட்டு அழுத்தம் கொடுக்கிறதாம்.

பாஜக போடும் கணக்கு

கனிமொழியிடம் பாடம் கற்ற அதிமுக எம்.பி.,: பதவியை பறித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்!

சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுத்தது தெற்கும், மேற்கும் தான். தென் மாவட்டங்களில் நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. மொடக்குறிச்சி, கோவை தெற்கு தொகுதியும் பாஜக வசமானது. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் தங்களுக்கு மேயர் சீட் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாம். கோவையை கேட்டாலும் எஸ்.பி.வேலுமணி அதற்கு சம்மதிக்க மாட்டார் என்பதால் அந்த பகுதியில் வேறு ஒரு மேயர் இடத்தை கேட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

சிவகாசியின் முதல் மேயர் யார்?

தென் மாவட்டங்களில் நாகர்கோவில் மாநகராட்சியை கேட்டுள்ளதாம். திருநெல்வேலியை பாஜகவினர் கேட்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சிவகாசியை கேட்டுள்ளனராம். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகாசியின் முதல் மேயர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என பாஜகவினர் கூறிவருகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி காட்டும் விசுவாசம்!

எந்த நம்பிக்கையில் அவர்கள் சிவகாசியை கேட்டுள்ளனர், எந்த கணக்கில் வெற்றி உறுதி என சொல்லிக் கொள்கின்றனர் என விசாரித்தால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர பாலாஜியை கைகாட்டுகின்றனர். தலைமறைவாக இருந்தபோதும் அதற்கு பின்னரும் பாஜகவினர் தான் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். சொந்தக் கட்சிக்காரர்களோ, கட்சி தலைமையோ கண்டுகொள்ளவில்லையாம்.

மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்: கூட்டுறவுத் துறை போட்ட உத்தரவு!

இந்த சூழலில் சிவகாசி மேயர் சீட் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் வெற்றி தேடித் தர வேண்டியது தனது பொறுப்பு என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாராம். அந்த தைரியத்தில் தான் பாஜகவினர் சிவகாசியை கேட்டுள்ளனர். கூட்டணியில் இடம்பெற்ற கட்சி தங்களுக்கு இந்த இடம் வேண்டும் என்று கேட்பது இயல்பு, கூட்டணி தலைமையும் அதற்கு சம்மதிப்பது எளிது, ஆனால் வாக்களிக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன மனநிலையில் உள்ளனர் என்பது முக்கியம். அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி