ஆப்நகரம்

மீண்டும் ஊரடங்கு: புதிய இ-பாஸ் விதிமுறைகள் என்ன?

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இ-பாஸ் முறை பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

Samayam Tamil 29 Jun 2020, 9:25 pm
கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூலை 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், முழு ஊரடங்கு அமலில் இருந்த சென்னை உட்பட்ட 5 மாவட்டங்களில் அதே முழு ஊரடங்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tn epass


மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளி மாவட்டங்களுக்கு சென்று வர இ-பாஸ் முறை அமலில் இருக்கும். இந்த நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இ-பாஸ் முறை பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

இ-பாஸ் முறை :
 அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

 வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

 முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத்தேவை இல்லை.

 ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட
மாவட்ட ஆட்சித்தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.

அடுத்த செய்தி