ஆப்நகரம்

தொகுதி பங்கீட்டில் கறார் காட்டிய அதிமுக - செம கடுப்பில் பாஜக!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பாஜகவிடம் அதிமுக கறார் காட்டி உள்ளது.

Samayam Tamil 30 Jan 2022, 9:59 am

ஹைலைட்ஸ்:

  • பேச்சுவார்த்தையில் கறார் காட்டிய அதிமுக
  • செம கடுப்பில் பாஜக!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ADMK BJP Alliance
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பாஜகவிடம் அதிமுக கறார் காட்டி உள்ளது.

தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. வரும் 4 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 5 ஆம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, திமுக - அதிமுக போன்ற பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இரண்டாவது நாளாக இன்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. சென்னை தி.நகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இதில், பாஜகவின் மூத்த தலைவர்கள் சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட செல்வாக்கு மிக்க பகுதிகளில் அதிகளவில் போட்டியிட பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
'மோடி அரசு செய்தது தேச துரோகம்!' - ராகுல் காந்தி ஆவேசம்!
இதைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றனர்.

அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன், பாஜகவினர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். கோவை, நாகர்கோவில், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், 20 சதவீத இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும் அதிமுகவிடம் பாஜக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
'இது ஒன்னும் நாகாலாந்து இல்ல!' - ஆளுநர் ரவிக்கு திமுக பதிலடி!
இதற்கு, 20 சதவீத இடங்களில் போட்டியிட அனுமதிக்க முடியாது என, பாஜகவிடம், அதிமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும், வேண்டுமானால், சுமார் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் இடங்களில் போட்டியிட்டு கொள்ளுங்கள் என தெரிவித்து விட்டதாகவும், எந்தெந்த மாநகராட்சிகளில் எந்தெந்த இடம் வேண்டும் பட்டியலை கொண்டு வாருங்கள் ஆலோசிப்போம் என்றும் பாஜகவிடம் அதிமுக கறாராக கூறி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் 80 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி