ஆப்நகரம்

ரஜினியிடம் என்ன பேசினேன்? மனம் திறந்த தமிழருவி மணியன்!

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த அவரது நண்பர் தமிழருவி மணியன் அவரிடம் பேசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்

Samayam Tamil 3 Dec 2020, 8:41 am
ரஜினியின் அரசியல் வருகை குறித்த தகவல்களால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. அவர் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த மாத இறுதியில் வைரலாகியது. அதில், கொரோனா, உடல்நிலை உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி அரசியலில் இருந்து ரஜினி விலகுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பின்னணியில், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி நேற்று முன் தினம் ஆலோசனை மேற்கொண்டார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன்பின்னர், போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எவ்வளவு சீக்கிரம் எனது முடிவை அறிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என்று கூறிவிட்டு சென்றார்.

எனவே அவர் எப்போது அறிவிப்பார் என மீண்டும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ள நிலையில், ரஜினிகாந்தின் நண்பரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். ரஜினியின் அரசியல் வருகை குறித்து தூபம் போட்டுக் கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான தமிழருவி மணியன் ரஜினியை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மாதமே சசிகலா ரிலீஸ்? புதிய அப்டேட்!

ரஜினியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், “தமிழக மக்களிடம் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் ரஜினிகாந்திற்கு கிடையாது. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ, அதை அவ்வப்போது அவரே சொல்லியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாது. அதனை அவரே அறிவிப்பார்” என்றார். மேலும், உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் தான் கூறியதாகவும் அப்போது தமிழருவி மணியன் தெரிவித்தார். ஆனால், ரஜினிகாந்திடம் அரசியல் தொடர்பாக பேசியவற்றை அவர் வெளியிட மறுத்து விட்டார்.

முன்னதாக, “ஏப்ரல் மாததில் ரஜினி கட்சி தொடங்குவார் எனவும், ஆகஸ்ட் மாதத்தில் மாபெரும் மாநாடு ஒன்று நடத்தப்படும் எனவும், மாநாட்டைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்வார்” என தமிழருவி மணியன் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி