ஆப்நகரம்

கூவத்தூரில் நடந்தது என்ன? : பிரபல எம்.எல்.ஏ அதிர்ச்சி தகவல்

எம்.எல்.ஏ களை தங்க வைக்கப்பட்டிடுந்த கூவத்தூர் தனியார் விடுதியில் என்ன நடத்தது என்பது குறித்து அதிமுக எம்.எல்.ஏ செம்மலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

TNN 26 Feb 2017, 6:56 pm
சென்னை :எம்.எல்.ஏ களை தங்க வைக்கப்பட்டிடுந்த கூவத்தூர் தனியார் விடுதியில் என்ன நடத்தது என்பது குறித்து அதிமுக எம்.எல்.ஏ செம்மலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil what happend in kuvathur semmalai mla
கூவத்தூரில் நடந்தது என்ன? : பிரபல எம்.எல்.ஏ அதிர்ச்சி தகவல்


முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்த உடன் தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவியது. இதனைதொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சி செய்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேர்ந்ததால் சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி கே பழனிசாமி முதல்வராக பதவியேற்றார்.

பன்னீர் செல்வத்தின் ராஜினாமா முதல் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சி சட்டசபையில் பெருன்பான்மையை நிருப்பிக்கும் வரை அதிமுகவின் 120-க்கு மேற்பட்ட எம்.எல்.ஏகள் கூவத்தூரி உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கூவத்தூரில் நடந்தது என்ன என்பது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் , எம்.எல்.ஏவுமான செம்மலை கூறும்போது , " ஒவ்வொரு எம்.எல்.ஏவும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது குறித்து சசிகலா தரப்பினரே முடிவு செய்தனர். எங்களை நம்பாமல் வெள்ளை தாளில் கையெழுத்து பெற்றனர். போலீசார்கள் வந்து எம்.எல்.ஏகளை விசாரித்த போது கூட சசிகலா தரப்பினர் என்ன டைப் பண்ணி கொடுத்திருந்தார்களோ அதனையே எழுதிக் கொடுத்தனர்." என்று அவர் தெரிவித்தார்.


what happend in kuvathur : semmalai mla

அடுத்த செய்தி