ஆப்நகரம்

ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்: உளவுத் துறை ரிப்போர்ட்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பெற காய் நகர்த்தி வருகிறார்.

Samayam Tamil 27 Dec 2021, 11:56 am
தமிழகத்தில் வரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அத்தனை மாநகராட்சி இடங்களையும் கைப்பற்ற ஸ்டாலின் வியூகம் அமைத்து வருகிறார். வாக்களார்களுக்கு சர்ப்ரைஸும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஷாக்கும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil what is mk stalin master plan for local body elections what is in the intelligence report
ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்: உளவுத் துறை ரிப்போர்ட்?


ஸ்டாலின் நிர்ணயித்த இலக்கு!

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா, எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கப் போகும் முடிவு என்ன என்று கேள்விகள் எழுந்து வருகின்றன. இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆலோசனைகள் ஆகியவற்றில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அத்தனை மாநகராட்சிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உள்ளார். அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி?

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடர் ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னர் இந்த கூட்டத் தொடர் நிறைவுபெறும் என்றும் அதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்கிறார்கள். நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுப்பதா, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுப்பதா என்ற விவாதம் இன்னும் முடிந்தபாடில்லை.

உளவுத் துறை ரிப்போர்ட்!

எடப்பாடிக்கு தூது விட்ட அன்வர் ராஜா? மன்னிப்பு கடிதமா இது?

இதுகுறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம். தேர்தலை நேரடியாக நடத்துவதால் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ரிப்போர்ட் தரும்படி உளவுத்துறையிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக சொல்கிறார்கள். ‘சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுக மீது பொது மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. திமுகவுக்கு கைகொடுக்காத இடங்களில்கூட மக்கள் மத்தியில் மாற்றம் உருவாகியிருக்கிறது. எனவே நேரடியாக மக்கள் மேயர்களை தேர்ந்தெடுத்தால் திமுகவுக்கு வாய்ப்பு அதிகம். வார்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுத்தால் அதிமுக ஆதிக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் லோக்கல் செல்வாக்கை பயன்படுத்தி கவுன்சிலர்கள் விலைக்கு வாங்கப்படுவர், அது திமுகவுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது’ என ஒரு ரிப்போர்ட் போயுள்ளதாக சொல்கிறார்கள்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்!

இந்த ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாராம். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் முறையாக மக்களிடம் சென்று சேர்ந்த பின்னர் நேரடி தேர்தல் அறிவிப்பை வெளியிடலாம் என யோசனை சொல்லப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் மக்களை கவரும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் வரவுள்ளதாம். அதன் பின்னர் தேர்தல் அறிவிப்பு வரும் போது 9 மாவட்ட ஊரக உள்ளட்சித் தேர்தல் போல் மாபெரும் வெற்றியை பெறலாம் என ஸ்டாலின் கணக்கு போடுகிறார் என்கிறார்கள்.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஷாக்!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல்? அரசு எடுக்கும் முடிவு என்ன?

கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்ற என்ற எண்ணமும் திமுக தலைமைக்கு இருப்பதாக சொல்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் அந்தக் கூட்டணியை தொடரலாம் என்ற யோசனையும் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டுள்ளதாம். இது குறித்து அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது அடுத்த சில தினங்களில் தெரியவரும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி