ஆப்நகரம்

சசிகலாவுக்கு அடுத்தடுத்து ஷாக்: இதை தவிர வேற வழியில்லையா?

சசிகலாவுக்கு எதிராக ஜெயக்குமார் ஒருபுறம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஊரடங்கு அறிவிப்பும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Jan 2022, 7:59 am
சசிகலா தனது அரசியல் சுற்றுப் பயணத்தை எப்போது தொடங்குவது என ஒவ்வொரு முறையும் நாள் பார்த்துக் கொண்டிருக்க அடுத்தடுத்து சிக்கல்கள் உருவாகி வருகின்றன. ஜனவரியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என திட்டமிட்டவருக்கு ஊரடங்கு அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil VK Sasikala


இதனால் மீண்டும் அறிக்கை வாயிலாகவே அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு சசிகலா தள்ளப்பட்டுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அவர், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்தது. இதனை பார்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கினர். ஆனால் பொருட்களின் தரத்தை பார்த்தபிறகு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புழுவுடன் உள்ள அரிசி, வெல்லம் என்ற பெயரில் பிசின் போன்ற ஒரு பொருளை அடைத்து கொடுக்கப்பட்டதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பரிசு தொகுப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு பதிலாக பண்டிகை கால கூடுதல் செலவுகளை சமாளிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது கொடுத்திருந்தால் அது பயனுள்ளதாக அமைந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வு: கையை விரித்த நீதிமன்றம், கேள்வி எழுப்பும் எம்.பி!
அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என வலம் வரும் சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று பொதுமக்கள் மத்தியில் சசிகலா தன்னை பிரபலப்படுத்தி வருகிறார். கட்சியின் உறுப்பினரே அல்லாத அவர் கட்சியின் கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்திவருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி எம்ஜிஆரின் சமாதிக்கு அதிமுக கொடியுடன் சென்ற சசிகலா அங்கு தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று பேட்டி அளித்துள்ளார்.
நீட் விலக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் ஸ்டாலின்
இதனால், சசிகலா மீது மோசடி, வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு பதியுமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அடுத்த செய்தி