ஆப்நகரம்

சசிகலாவுக்கு திடீரென திறந்த கதவு: இது நல்ல வாய்ப்பு - நம்பிக்கைக்கு என்ன காரணம்?

உச்ச நீதிமன்ற உத்தரவில் தங்களுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 24 Feb 2023, 11:58 am
அதிமுக இடைப்பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சசிகலா தரப்புக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.
Samayam Tamil sasikaala


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சில வாரங்களில் கூடிய அதிமுக சிறப்பு பொதுக்குழு சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது. அதன் பின்னர் முதலமைச்சராக பதவியேற்க அவர் காய் நகர்த்தி வந்த நிலையில் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி அவர் நான்கு ஆண்டுகள் சிறை செல்ல நேர்ந்தது.

அதன்பின்னர் அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து நடந்தன. ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம் முடிவுக்கு வந்து இரட்டை தலைமை உருவானது. சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பொதுச்செயலாளரை கட்சியிலிருந்து நீக்க முடியாது என வழக்கு தொடர்ந்தார் சசிகலா. தற்போதும் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என உரிமை கோரிவருகிறார்.
எடப்பாடிக்கு ஆறுதல் பரிசு தானா? பாஜக பிளான் என்ன? பன்னீருக்கு புதிய அசைண்ட்மெண்ட்!
ஐந்து ஆண்டுகள் இரட்டை தலைமையின் கீழ் அதிமுக இயங்கி வந்த நிலையில் ஜூலை 11இல் அதிமுக பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது. உச்ச நீதிமன்றம் அதை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறையன்பு பெறும் புதிய பதவி: ரூட் கிளியர் - முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல்!

பொதுக்குழு கூடி முடிவு செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்றால், தன்னை பொதுச்செயலாளராக்கிய செயற்குழு, பொதுக்குழுவின் முடிவையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்று சசிகலா தரப்பு தனது வழக்கறிஞர் குழுவிடம் ஆலோசித்து வருவதாக கூறுகிறார்கள். மதுரையில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள் உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கு இது குறித்து கடிதம் எழுத தயாராகிவருவதாக சொல்கிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்