ஆப்நகரம்

ஸ்டாலின் போடும் கணக்கு: வெங்கையாவை அழைத்து வரும் பின்னணி என்ன?

கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வர உள்ளார். ஏன் ஸ்டாலின் வெங்கையாவை அழைக்கிறார் என்பது குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Samayam Tamil 23 May 2022, 8:29 am
சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக தங்கள் இருப்பைக் காட்டுவதற்காக கூட பெரியளவிலான போராட்டங்களையோ ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்களையோ அதிகளவில் முன்வைக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தமிழ்நாட்டில் நாங்கள் தான் எதிர்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் களத்தில் திமுகவை அதிகம் விமர்சிக்கும் கட்சியாகவும் பாஜக இருக்கிறது.
Samayam Tamil what is the background to bringing venkaiah naidu what is mk stalin plan in karunanidhi statue inauguration
ஸ்டாலின் போடும் கணக்கு: வெங்கையாவை அழைத்து வரும் பின்னணி என்ன?


கலைஞர் சிலை திறக்க வேறு ஆளே இல்லையா?

திமுகவும் பாஜகவை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதிர்த்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்துவைக்க துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. பாஜகவின் முகமாக அறியப்பட்ட வெங்கையாவை ஏன் ஸ்டாலின் அழைத்து வருகிறார், கலைஞர் சிலை திறக்க வேறு ஆளே இல்லையா என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன.

விழா ஏற்பாடுகள் தீவிரம்!

மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 26ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தபடியே சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தின் வளாகத்தில் கலைஞரின் கம்பீர சிலை நிறுவும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ரூ1.7 கோடி மதிப்பீட்டில் சுமார் 16 அடியில் தயாராகும் சிலையை, 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு இடையே கலைஞர் கருணாநிதி சிலை நிறுவப்படவுள்ளது. மே 28ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கலைஞர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

ஸ்டாலின் - வெங்கையா நாயுடு ஒரே மேடையில்

சிலை திறப்பு விழாவுக்காக நிகழ்ச்சி மாலை 5.45 மணியளவில் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறைப்புரை ஆற்றுகிறார். முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையுரை ஆற்றுவார் என்றும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அதிருப்தி?

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளை உள்ளடக்கி வலுவான கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என ஒரு புறம் பேசிக்கொண்டே, பாஜகவை அழைத்து வந்து விழா நடத்துவது எந்த வகையில் நியாயம் என கூட்டணிக்குள்ளிருந்தும் அதிருப்தி குரல்கள் கேட்கின்றன. இது குறித்து திமுக உயர் மட்ட வட்டாரத்தில் பேசினோம்.

கூட்டணியில் மாற்றமா?

“மக்களவைத் தேர்தல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்கிறது. பல விஷயங்களில் ஒன்றிய அரசின் ஆதரவு தேவையாக உள்ளது. மாநில அரசுகள் எல்லாவற்றிலும் தங்களை சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலையை பாஜக கடந்த சில ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கொண்டுவரும் முக்கிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கவோ, நிதி வழங்கவோ ஒன்றிய அரசின் பார்வை அவசியமாகிறது.

ஸ்டாலின் பிளான் இதுதான்!

அன்புமணிக்கு முடிசூட தயாரான ராமதாஸ்: பாமகவில் நடக்கும் அதிரடி மாற்றம்!

இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறது. வெங்கையா நாயுடு அந்த பதவியை குறிவைத்துள்ளதாக கூறுகிறார்கள். அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் திமுக ஆதரவளிக்கும். அதேபோல் அவர் அந்த பதவியை அடைந்தால் தமிழகத்தின் நீட் தேர்வு விலக்கு விவகாரம் உள்ளிட்ட சில விஷயங்களில் திமுக தமக்கு சாதகமான பலன்களை பெறமுடியும் என்பதே ஸ்டாலின் போடும் கணக்கு” என்கிறார்கள்.

அடுத்த செய்தி