ஆப்நகரம்

இளைய தளபதியாகிறார் சிவகார்த்திகேயன்? உதயநிதி ஆடும் புதிய கேம்!

உதயநிதி ஸ்டாலினுக்கும், நடிகர் விஜய்க்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 17 May 2022, 5:44 pm
உதயநிதி ஸ்டாலினுக்கு கூடிய விரைவில் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. அமைச்சர் பதவியை அவர் ஏற்பதற்கு முன்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், உதயநிதியின் சினிமா வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வரவுள்ளது. அதேசமயம், சினிமா தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட பணிகளை அவரது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மேற்கொள்ளும் என தெரிகிறது. எனவே, திரைத்துறை அவரது கண்ட்ரோலில் தற்போது இருப்பதை போலவே பின்நாட்களிலும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Samayam Tamil விஜய், உதயநிதி
விஜய், உதயநிதி


நடிப்புத்துறை தனது கையை விட்டு போனாலும், தனக்கான வலுவான அடித்தளம் அதில் இருக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் பட்டாளம் துணையிருக்க வேண்டும் என்று உதயநிதி தரப்பு நினைக்கிறது. இதனால், இப்போதிருந்தே சிவகார்த்திகேயனை வளர்த்து விடும் பணிகளில் அவர் இறங்கி விட்டதாக கூறுகிறார்கள். அதன் வெளிப்பாடாகவே ‘டான்’ ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவரது பேச்சு அமைந்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த விழாவில் உதயநிதி தயாரித்து, விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தை பற்றி கிண்டலாகவும் பேசியிருக்கிறார்கள்.

இந்த பின்னணி குறித்து விசாரிக்கும்போது, “விஜய் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அது தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என உதயநிதி நினைக்கிறார். இன்னும் சில நாட்களில் அமைச்சராகி ஸ்டாலின் காலத்துக்கு பின்னர் தமிழக அரசியலில் முக்கியமான சக்தியாக உதயநிதி உருவெடுக்கும் போது விஜய் அரசியலில் வந்து நிற்பார். அப்போது அவருக்கு எதிராக விஜய் இருப்பார் என உதயநிதிக்கு சொல்லப்பட்டுள்ளது.” என்கிறார்கள்.

விஜய்யின் அரசியல் வருகையை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும். இல்லையென்றால் அது உங்களுக்குதான் அபத்து. சினிமாவில் அடிவாங்கினால் அரசியலுக்கு விஜய் வரமாட்டார் என்ற யோசனையும் உதயநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, அது தவறான யோசனை. இப்போது சினிமாவில் விஜய் கோலோச்சிக் கொண்டிருப்பதால், அவரது பார்வை பெரிதாக அரசியல் பக்கம் திரும்பவில்லை. ரஜினியை விட அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் சினிமாவில் அடிவாங்கினால் அவர் நேரடியாக வந்து நிற்பது அரசியலாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

வேல்முருகன் மனைவி பாஜகவில்: அண்ணாமலை அடுத்தடுத்து அடிக்கும் சிக்ஸர்!

திரைத்துறையினரை அரவணைத்து தனது பக்கத்தில் வைத்துக் கொள்வது கலைஞர் டெக்னிக். அந்தந்த சமயத்தில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களுடன் கலைஞர் நட்பு பாராட்டுவது அனைவரும் அறிந்ததே. திமுகவுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் உச்ச நட்சத்திரங்கள் பேசிவிடக் கூடாது என்பதில் கலைஞர் கவனமாக இருந்தார். ஆனால், ஸ்டாலினிடம் அந்த அணுகுமுறை இல்லை. மிஸ்கின், சீனுராமசாமி உள்ளிட்ட திரைத்துறையினர் ஸ்டாலினை சந்தித்து திமுக ஆட்சி பற்றி புகழ்ந்து பிரஸ் மீட் கொடுத்து உதயநிதியின் ஏற்பட்டின் பேரில்தான்.

அந்த சமயத்தில் ஸ்டாலினை சந்திக்குமாறு நடிகர் விஜய்யிடம் உதயநிதி கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர் இசைவு கொடுக்கவில்லை என்ற தகவலும் உலா வந்தது. இதுதான் இருவருக்கும் இடையேயான மோதல் போக்குக்கு ஆரம்பப்புள்ளி என்கிறார்கள். இன்றைய தேதியில் விஜய்க்கு பின்னர் அடுத்த தலைமுறைக்கான ஆளாக சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார். எனவே, அவரையும் அவரது ரசிகர்களையும் தனக்கான ஆளாக பயன்படுத்திக் கொள்ள உதயநிதி நினைக்கிறார். மேலும், சினிமாத்துறையில் தனது அறிவிக்கப்படாத தளபதியாக சிவகார்த்திகேயனை கொண்டு வரும் யோசனையும் உதயநிதிக்கு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி