ஆப்நகரம்

நம் வல்லரசு நாட்டில் இப்படியும் இருக்கத்தான் செய்கிறது! இதற்கு முடிவு தான் என்ன?

பெரம்பலூர் மாவட்டத்தில் இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த அவல நிலை நிகழ்ந்துள்ளது.

TNN 2 Dec 2017, 4:26 am
பெரம்பலூர் மாவட்டத்தில் இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த அவல நிலை நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil what is the final decision for this peramabalur incident
நம் வல்லரசு நாட்டில் இப்படியும் இருக்கத்தான் செய்கிறது! இதற்கு முடிவு தான் என்ன?


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வேப்பந்தட்டை அருகிலுள்ள அயன் பேரையூரில் நேற்று முன் தினம் மாலையில் பெரியசாமி என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஆனால், அவரது உடலை அடக்கம் செய்தறகான மயானம் வெள்ளாற்றின் மறு கரையோரத்தில் உள்ளது. அப்போது, அவரது உடலை அடக்க செய்ய எடுத்துச் சென்ற போது வெள்ளாற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடியது.

இந்த நிலையில், வெள்ளாற்றில் உள்ள மயானத்திற்கு செல்வதற்கு வேறு வழியோ மாற்றுப் பாதையோ இல்லாததால், இடுப்பளவு தண்ணீரிலும் பெரியசாமியின் உடலை தூக்கிச் சென்றனர். அப்போது, ஒருவரை தண்ணீர் அடித்துச் சென்றது. உறவினர்கள் கை கொடுத்து அவரை காப்பாற்றியுள்ளனர். அதன் பிறகு ஆற்றைக் கடந்து வெள்ளாற்றிலுள்ள மயானத்தில் பெரியசாமியின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இனி வரும் காலங்களில் இது போன்று நிலை நிகழக் கூடாத வகையில், மயானத்திற்குச் செல்ல வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று அயன் பேரையூர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி