ஆப்நகரம்

கொலை முயற்சி வழக்கில் கைதா? அப்படியென்ன அவசியம்? எம்.எல்.ஏ கருணாஸ் கேள்வி!

சென்னை: தன்னைக் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று எம்.எல்.ஏ கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 23 Sep 2018, 9:31 am
கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்தார். முடிந்தால் காக்கிச் சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப் பார்க்குமாறு கூறினார்.
Samayam Tamil karunas


முதலமைச்சர் பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலி கிராமத்தில் உள்ள கருணாஸ் இல்லத்திற்கு 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆணையர்கள், 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்றனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் கருணாஸைக் கைது செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், என் மீதான வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன். 307வது பிரிவு, அதாவது கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

என்னைக் கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். அதைப் பெற்றார்களா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

What is the need of arrest in Secion 307 asks MLA Karunas.

அடுத்த செய்தி