தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் அதிமுகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களது ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் சசிகலா விவகாரம் வேறு பரபரப்பை கூட்டியது. இந்த கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் முதல்வர் வேட்பாளர் யார் என்று முடிவு எட்டப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, வரும் 7ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்றார்.
இதன் தொடர்ச்சியாக கட்சிக்குள் ஆதரவு திரட்டும் வேலையில் முதல்வரும், துணை முதல்வரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஈரோடு மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
அவர்தான் முதல்வர் வேட்பாளர்...அமைச்சர் ஓப்பன் டாக்!
அதன் பயனாகத் தான் நல்ல மழை பெய்து வருகிறது. பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படுவதாக பிரதமரே பாராட்டியுள்ளதாக தெரிவித்தார். அப்போது முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையில் நடக்கும் கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அறைக்குள் பேசுவதை வெளியில் கூறுவது நாகரிகம் அல்ல என்பது தான் எனது கருத்து என்றார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் தனது ஆதரவு என்றும், அவர் தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்பது போல் செங்கோட்டையன் பேசியுள்ளது தெரிய வருகிறது.
இதற்கிடையில் சசிகலா விவகாரம் வேறு பரபரப்பை கூட்டியது. இந்த கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் முதல்வர் வேட்பாளர் யார் என்று முடிவு எட்டப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, வரும் 7ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்றார்.
இதன் தொடர்ச்சியாக கட்சிக்குள் ஆதரவு திரட்டும் வேலையில் முதல்வரும், துணை முதல்வரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஈரோடு மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
அவர்தான் முதல்வர் வேட்பாளர்...அமைச்சர் ஓப்பன் டாக்!
அதன் பயனாகத் தான் நல்ல மழை பெய்து வருகிறது. பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படுவதாக பிரதமரே பாராட்டியுள்ளதாக தெரிவித்தார். அப்போது முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையில் நடக்கும் கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அறைக்குள் பேசுவதை வெளியில் கூறுவது நாகரிகம் அல்ல என்பது தான் எனது கருத்து என்றார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் தனது ஆதரவு என்றும், அவர் தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்பது போல் செங்கோட்டையன் பேசியுள்ளது தெரிய வருகிறது.