ஆப்நகரம்

நிவர் புயல்: முதல்வர் நடத்தும் அவசர ஆலோசனை - காரணம் இதுதான்!

நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Samayam Tamil 23 Nov 2020, 1:00 pm
வங்கக் கடலில் உருவாகும் நிவர் புயல் நவம்பர் 25ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil nivar cyclone


இந்நிலையில் அரசு சார்பில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கெனவே பேரிடர் மேலாண்மை, மின்சாரத்துறை அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசி வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

நிவர் புயல்: மக்கள் செய்யும் முன்னேற்பாடு: அரசாங்கத்தை நம்ப முடியாதா?

2018ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது கஜா புயல். புயல், மழை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது. மரங்கள் பல இடங்களில் சாய்ந்து விபத்துக்கள் ஏற்பட்டன. கால்நடைகள் பலியாகின. வீடுகள் இடிந்தன. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். பல இடங்களில் மக்கள் இன்னும் அந்தப் பாதிப்பிலிருந்து மீளவில்லை.

புயல் பற்றிய எச்சரிக்கையை முன்கூட்டியே வழங்கியிருந்தாலோ, பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளை உடனடியாக அரசு மேற்கொண்டிருந்தாலோ பாதிப்புகளை குறைத்திருக்க முடியும் என்று கூறப்பட்டது. தன்னார்வலர்களும், பொது மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்

கஜா புயலை அரசு கையாண்ட விதம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் மக்களவைத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு எதிரான மனநிலைக்கு வந்தனர். இதனால் அக்கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது.

அதிமுக 117 - பாஜக 117: அமித் ஷா வைக்கும் டிமாண்ட்!

இதனால் இந்த முறை அந்த தவறு நடந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டால் இன்னும் ஆறு மாதங்களில் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வருகின்றன.

அடுத்த செய்தி