ஆப்நகரம்

தமிழகம் வரும் சசிகலா: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்!

பெங்களூருவில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவின் பயண நேரத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 7 Feb 2021, 11:37 pm
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், மருத்துவமனையில் வைத்தே அவர் விடுதலை செய்யப்படுவதற்கான ஆவணத்தில் சிறைத்துறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கினர்.
Samayam Tamil சசிகலா
சசிகலா


மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்த சசிகலா, மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சசிகலா பிப்ரவரி 8 ஆம் தேதி (நாளை) தமிழகம் திரும்பவுள்ளார் என்று அமமுக பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா வருகையை முன்னிட்டு கர்நாடக மாநில எல்லையில் இருந்து, அவர் தங்கவுள்ள தி.நகர் பகுதியில் உள்ள வீடு வரை வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தமிழக எல்லையில் இருந்து சசிகலா தங்கவிருக்கும் தி.நகர் இல்லம் வரை 30க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கக்கப்படவுள்ளது.

சசிகலா ரிட்டர்ன்: காவல்துறை கிரீன் சிக்னல், தி.நகரிலிருந்து அரசியல் ஆட்டம் ஆரம்பம்!

இந்த நிலையில், சசிகலாவின் பயண நேரத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து நாளை காலை 9 மணிக்கு கிளம்புவதாக இருந்த சசிகலாவின் பயண நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7மணியளவில் தேவனஹள்ளியில் இருந்து சசிகலா தமிழகம் கிளம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி