ஆப்நகரம்

சசிகலா விடுதலையானதும் அரசியலில் அதிரடி மாற்றமா? -அதெல்லாம் ஒண்ணும் நடக்காதாம்!

சசிகலா விடுதலையானதும் தமிழக அரசியலில் அதிரடி மாற்றம் நிகழுமா என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார்.

Samayam Tamil 5 Oct 2020, 4:41 pm
சசிகலா விரைவில் விடுதலையானதும் அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றம் நிகழக்கூடும் என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் இன்று கூறியது:
Samayam Tamil cpi


நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்து விடுவது போன்று தான் மத்திய அரசின் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறும் வரையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வருகிற 12 ஆம் தேதி மாநிலம் அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

அதிமுகவில் அதிகார யுத்தம்: ஓபிஎஸ் முடிவில் திடீர் மாற்றம்!

திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட கூட்டணி. பலமான இந்த கூட்டணி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கும்.

அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை நீடித்து வருவதாக தெரிகிறது. இது உட்கட்சி பிரச்சினைதான் என்றாலும், இதுகுறித்து அவர்கள் பகிரங்கமாக மோதிக் கொள்வதால் தமிழக அரசு நிர்வாகம் சீர்குலைந்து போய் உள்ளது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரியகுளமா, எடப்பாடியா? பின்னால் இருப்பது சாதி அரசியல் தானா?

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்தாலும் அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது. காரணம் அவர் ஒரு குற்றவாளி. சொல்லுகிற அளவுக்கு பெரிய சக்தி அல்ல என்று முத்தரசன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி