ஆப்நகரம்

ஊரடங்கு தளர்வு? கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

பொது முடக்கம் தளர்வு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Samayam Tamil 29 Aug 2020, 11:54 am
பொது போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பொது முடக்கம் தளர்வு கோரிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Samayam Tamil bus service


முன்னதாக சில தினங்களுக்கு முன் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அந்தக் கூட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூறினர்.

இந்நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தின் போது தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முன்னெடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார்.

தமிழகத்தில் இ பாஸ் ரத்து இல்லை: பின்னணி என்ன?

“தமிழகத்தில் சுமார் 45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தப்படுகிறது. சிகிச்சைக்கு ஐசிஎமார் பரிந்துரைத்துள்ள மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு உள்ளன. 85.45 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். உயிரிழப்பு நாட்டிலேயே தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன” என முதல்வர் பேசினார்.

தமிழ்நாட்டில் அடுத்த கட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி?

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பிற்பகலில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இந்த இரு கூட்டங்களுக்குப் பின்னர் பொது முடக்கம் நீட்டிப்பு, தளர்வு அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அடுத்த செய்தி