ஆப்நகரம்

சசிகலாவுக்கு மதுசூதனன் கொடுத்த கிஃப்ட்? இனி ஒரே அதிரடி தான்!

சசிகலா, உடல் நிலை சரியில்லாத மதுசூதனனை சந்திக்கச் சென்றதன் பின்னணியில் உள்ள கதை என்ன தெரியுமா?

Samayam Tamil 27 Jul 2021, 1:36 pm
அதிமுகவில் சசிகலா புயல் கிளம்பி சுற்றி சுழன்றடித்து வரும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளனர்.
Samayam Tamil sasikala


சசிகலா ஆடியோ வெளியீடு, தொலைக்காட்சி பேட்டி, லஞ்ச ஒழிப்புத் துறை பிடியில் அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை தூக்கும் திமுக என அதிமுக பல்வேறு பிரச்சினைகளை ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறது.
ரெய்டுக்கு ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி? அலறும் அதிமுக மாஜி அமைச்சர்கள்!
தேர்தலுக்கு முன்பாக சசிகலா கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்க பெரியளவில் முயற்சி மேற்கொள்லவில்லை. தேர்தலுக்குப் பின்னர் அவர் எடுக்கும் எல்லா முயற்சிகளும் நல்ல பலனளித்திருக்கிறது. அதை எடப்பாடி பழனிசாமி தரப்பும் உணர்ந்துள்ளது.

அவைத் தலைவர் மதுசூதனனை சுற்றி சமீப நாள்களாக சில தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மட்டுமே சசிகலாவை எதிர்த்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அணியில் தங்கமணி, வேலுமணி, வீரமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் உள்ளனர்.

இதில் சசிகலாவை எதிர்த்து பேசவேண்டுமென்றால் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகிய மூவர் மட்டுமே சவுண்டு கொடுக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியே இது தொடர்பான பேச்சை பல முறை தவிர்த்து ஒருமுறை பேசுகிறார்.

ஓபிஎஸ்ஸே சசிகலாவுடன் அலைபேசியில் பேசிவருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் மதுசூதனனும் சசிகலாவோடு பேசிவருகிறார். அத்துடன் அவர் அவைத் தலைவர் என்பதால் அவர் கையெழுத்திட்ட கோப்பு ஒன்றை சசிகலாவிடம் கொடுக்கச் சொல்லி தனது குடும்பத்தினரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த கோப்பு சசிகலா கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் சசிகலா மதுசூதனனை பார்க்க காரில் கட்சி கொடியை கட்டி கிளம்பியதாக கூறப்படுகிறது.
9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல்!
மதுசூதனன் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலாவுக்கு பெரிய செல்வாக்கு இருக்கிறது. ஜெயலலிதாவின் கைரேகையையே பெற்று அரசியல் செய்த அவருக்கு ஐசியூவில் இருக்கும் மதுசூதனனின் கை ரேகை கிடைப்பது பெரிய விஷயமாக இருக்காது என்றும் புதிய குண்டை தூக்கிப் போடுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆறு மாவட்டச் செயலாளர்களை, தனக்கு வேண்டப்பட்ட டிவி சேனல் செய்தியாளர்களை அப்பல்லோவிலேயே இருக்கச் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

அதிமுக பல்வேறு பிரச்சினைகளில் அல்லோகலப்பட்டுள்ள நிலையில் சசிகலா எதிர்ப்பு என்பது தேவையற்ற ஒன்று என்றும் அவர் மீண்டும் கட்சிக்குள் வருவது மிக அவசியமான ஒன்று என்றும் பேச்சு எழுகிறது. இதனால் மனம் மாறி காட்சிகள் மாறத் தொடங்கும் என ஆருடம் கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி