ஆப்நகரம்

அடுத்த 2 மணி நேரம் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Nov 2021, 6:36 am
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு முழுக்க வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
Samayam Tamil chennai rain update


இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

வெள்ள பாதிப்பு நிலவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முழுவதும் களத்திலிருந்து பார்வையிட்டதுடன் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க முடுக்கிவிட்டார்.
அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை; தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பல இடங்களில் மக்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன.

இன்று மழை நிலவரம் எப்படி இருக்கும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு இன்றாவது திரும்ப முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக வானிலை ஆய்வு மையம் காலையிலேயே வானிலை அறிவிப்பை வெளியிட்டது.
வடகிழக்கு பருவமழை பாதிப்பால் இதுவரை 4 பேர் மரணம்... 260 வீடுகள் சேதம் - தமிழக அரசு
அந்த வகையில். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி