ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு டிசம்பரா, ஜனவரியா? முதல்வர் நடத்தும் ஆலோசனை!

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Samayam Tamil 4 Nov 2020, 12:46 pm
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பான அரசு முடிவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் முதல்வர் அவசரமாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
Samayam Tamil when are schools opening in december or january cm edappadi palanisamy is holding consultations today
பள்ளிகள் திறப்பு டிசம்பரா, ஜனவரியா? முதல்வர் நடத்தும் ஆலோசனை!


அகலாத கொரோனா அச்சம்!

கொரோனா பரவல் காரணமாக ஏழு மாதங்களுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தியே தீர்வோம் என அரசு அறிவித்து அதற்கான தேதிகளை அறிவித்தது. ஆனால் பெற்றோர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

மாணவர்களுக்கு பரவிய கொரோனா

மத்திய அரசு கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதித்தும் தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி அது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. அக்டோபர் முதல் வாரம் பள்ளிகளில் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் வரலாம் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த முடிவு திரும்பப்பெறப்பட்டது. அந்த சமயத்தில் பள்ளிகளைத் திறந்த பிற மாநிலங்களில் மாணவர்களுக்கு கொரோனா பரவல் அதிகளவில் பரவியது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் டெல்லி பயணம் - காரணம் என்ன?

சாத்தியக்கூறு எப்படி உருவானது?

தற்போது நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள், கல்வியாளர்கள், எதிர்க்கட்சிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் வரை தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வந்தார்.

கமல்ஹாசன் களமிறங்கும் தொகுதி இதுதான்!

அரசின் மனமாற்றம்!

இந்நிலையில் எந்த அடிப்படையில் தமிழக அரசு கல்வி நிலையங்களை திறப்பதற்கான உத்தரவை பிறப்பித்தது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நிலையில் அது குறித்து பரீசிலனை செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். வழக்கமாக திமுகவின் ரியாக்‌ஷனுக்கு கிண்டலாக பதில் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார் பரீசிலனை செய்யப்படும் என தெரிவித்த நிலையில் தமிழக அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ளும் மனநிலையில் உள்ளது என்பது தெளிவாகிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளிகள் திறப்பு டிசம்பரா, ஜனவரியா?

டிசம்பர் மாதத்துக்கு மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி இறுதியில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித் துறை அமைச்ச்ர் கே.பி.அன்பழகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் தேதியை தள்ளி வைக்கலாமா, எவ்வளவு காலம் தள்ளி வைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது.

அடுத்த செய்தி