ஆப்நகரம்

அதிமுக அலுவலகத்துக்கு எப்போது செல்கிறார் இபிஎஸ்? சீரமைக்கும் பணிகள் தீவிரம்!

அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Samayam Tamil 26 Jul 2022, 4:51 pm
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார். அந்த சமயத்தில், ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனர். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அத்துடன், ஒரு மாதத்திற்கு பிறகுதான் தலைமை கழகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சீல் அகற்றப்பட்டு இபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருள்களைக் காணவில்லை என அதிமுக எம்.பி.யும், இபிஎஸ் ஆதரவாளருமான சிவி சண்முகம் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகாரும் அளித்துள்ளார்.
தொண்டை பாதித்தாலும், தொண்டு பாதிக்காது: முதல்வர் ஸ்டாலின்!
இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உடைந்த பொருட்கள், கண்ணாடி, மேஜை, நாற்காலி, பீரோ போன்றவற்றை புதிதாக வாங்கவும் அலுவலகத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்திற்குள் இந்த பணி நிறைவடையும் என தெரிகிறது. அதன்பின்னர், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இதுவரை அக்கட்சியின் தலைலை அலுவலகம் செல்லாமர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி