ஆப்நகரம்

ஊரடங்கில் தளர்வு எப்போது? முதல்வர் நடத்தும் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Samayam Tamil 31 May 2021, 2:10 pm
கொரோனாவின் இரண்டாவது அலையில் உலகளவில் இந்தியாவில் தான் பாதிப்பு மிக அதிகமாக பதிவானது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பாதிப்பு சரிவைச் சந்தித்த போது தமிழகத்தில் ஏறுமுகத்தில் இருந்தது. உயிரிழப்பும் அதிகரித்தது.
Samayam Tamil TN Lockdown Relaxation


இந்நிலையில் தமிழகத்தில் விதிக்கப்பட்ட தீவிர ஊரடங்கு, தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரித்தல், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கியது, மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரித்தது, கொரோனா தடுப்பு மையங்களை அதிகரித்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை: செவி சாய்க்குமா அரசு?
தினசரி பாதிப்புக்கு உள்ளாபவர்களைவிட குணமாகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தீவிர ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் தற்போதைய பாதிப்பு நிலவரம் எப்படி உள்ளது, ஊரடங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதில் கை கொடுத்துள்ளது, பாதிப்பு குறைவதால் ஊரடங்கில் எப்போது தளர்வுகளை அறிவிக்கலாம், முதலில் என்னென்ன பணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதில் சிக்கல்?
தமிழகத்தில் காய்கறிகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று மளிகைப் பொருள்கள் வீடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மருத்துவக் குழுவுடன் ஆலோசனைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆகியோரோடும் முதல்வர் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

அடுத்த செய்தி