ஆப்நகரம்

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் எப்போது? - அமைச்சர் சர்ப்ரைஸ் அறிவிப்பு

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Jun 2021, 3:50 pm
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நான்காம் தலைமுறை / ஐந்தாம் தலைமுறை (4g/5g) வசதியுடன் கூடிய இணையதள இணைப்புடன் டேப்லெட் அரசு செலவில் வழங்கப்படும். அதோடு அனைத்துக் கல்வி நிலையங்களிலும் wifi வசதி செய்து கொடுக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வழியில் பாடங்கள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் மாணவ, மாணவிகளுக்கு இலவச டேட்டாவுடன் கூடிய டேப்லெட் வழங்கப்பட்டால் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்த சூழலில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், '' பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் எனக்கு நல்ல நண்பர்: முன்னாள் அமைச்சர் தொண்டரிடம் பேச்சு!

மேலும், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பெற்றோர்களிடம் இருந்து வரக்கூடிய கருத்துக்கள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.

பள்ளிக்கல்வி கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிப்பதற்கு, பாலியல் தொடர்பான புகார் அளிப்பதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அதே எண்ணில் தொடர்பு கொண்டோ, இமெயில் மூலமாகவோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

அடுத்த செய்தி