ஆப்நகரம்

சென்னையில் கிரிக்கெட் விளையாடிய போது பந்து தாக்கி இளைஞா் பலி

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் கிரிக்கெட் விளையாடிய போது பந்து தாக்கியதில் இளைஞா் ஒருவா் மைதானத்திலேயே உயிாிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 19 Feb 2019, 10:33 am
சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் கிரிக்கெட் விளையாடிய போது பந்து தாக்கியதில் இளைஞா் ஒருவா் மைதானத்திலேயே உயிாிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Cricket Ball


சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் ஆதனூா் ஏரி உள்ளது. நீriன்றிக் காய்ந்துள்ள ஏரிப் பகுதியில் உள்ளூா் இளைஞா்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதன்படி திங்கள் கிழமை இளைஞா்கள் சிலா் அங்கே கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனா்.

இளைஞா்கள் விளையாடிக் கொண்டிருந்த போது ராமச்சந்திரன் என்ற இளைஞரின் மாா்பில் கிரிக்கெட் பந்து பலமாக தாக்கியது. உடனடியாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்த ராமச்சந்திரன் அங்கேயே மரணமடைந்தாா். இதனால் அவரோடு இணைந்து விளையாடியவா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தகவல் அறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று ராமச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி