ஆப்நகரம்

ஆர்கே நகரில் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம்

ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் எப்போது நடைபெறும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 11 Apr 2017, 10:43 pm
சென்னை: ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் எப்போது நடைபெறும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
Samayam Tamil when will be rk nagar election election commission explains
ஆர்கே நகரில் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம்


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பணப்பட்டுவாடா புகார்களையடுத்து, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒராண்டுகுள்ளோ அல்லது மத்திய அரசின் ஆலோசனையின் அடிப்படையிலோ நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதியில் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதி இருகிறது. ஆனாலும், பல்வேறு காரணங்களால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டால், மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தேர்தல் நடத்தலாம் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒராண்டுகுள்ளோ அல்லது மத்திய அரசின் ஆலோசனையின் அடிப்படையிலோ நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

ஆர்கே நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், தங்கள் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்ததுள்ளது.
When will be RK Nagar Election: Election commission explains

அடுத்த செய்தி