ஆப்நகரம்

குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூ: அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளார்.

Samayam Tamil 4 Aug 2021, 7:00 am
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றவில்லை என அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகும் நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட முடியாது. ஆனால் இந்த ஒரு கோரிக்கையை மட்டுமாவது உடனே நிறைவேற்றுங்கள் என்கிற அளவுக்கு மக்கள் இதை பற்றியே பேசிவருகின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூ உரிமைத் தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்ததை தான் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
Samayam Tamil tn family heads cash


இந்நிலையில் இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் இது குறித்து வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளன. ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இருந்தால் மட்டுமே 1000 ரூபாய் கிடைக்கும் என போகிறபோக்கில் யாரோ கிளப்பிவிட மக்கள் கொரோனாவையும் பொருட்படுத்தாது புகைப்படத்தை மாற்ற கிளம்பினர்.
தமிழகத்தில் தலைகாட்டும் கொரோனா: கடைகள் திறக்க கட்டுப்பாடு!
பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நம்பிக்கையூட்டும் விதமாக பேசியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா தொற்றில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதுவரை 99% ரேஷன் அட்டைதாரர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், “சில மாவட்டங்களில் பொது வினியோக திட்ட கடைகளில் தரமற்ற மற்றும் நிறமற்ற அரிசி வழங்குவதாக புகார்கள் வந்துள்ளது. கடைகளில் வந்தடைந்த தரமற்ற அரிசிகள் திரும்பப் பெறப்பட்டு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்று பேசினார்.

அரிசி மற்றும் நெல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.
ரேஷன் அட்டை இல்லைனா என்ன? கொரோனா நிவாரண நிதி 4000ரூ: தமிழக அரசு உறுதி!
“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ரேஷன் அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா வேண்டாமா என்ற விவகாரத்தில் யாரும் அச்சமடைய வேண்டாம். இது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவினை அவர் அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி