தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
தமிழக சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும்.” என்றார்.
அத்துடன், நடப்பாண்டில் இருந்தே, அரசு பள்ளியில் இருந்து கல்லுாரிகளுக்கு சென்று முதல், இரண்டு, மூன்றாவது ஆண்டு படிக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளது. முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் இருந்து சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றதற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க ஏதுவாக பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், இந்த திட்டத்தை அரசு பள்ளி மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்துமாறும் கோரிக்கை எழுந்துள்ளன. அரசு பள்ளிகள் போலவே, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை, எளிய மாணவிகள் பயின்று வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் திருமண நிதியுதவித் திட்டம் கிடைத்து வந்தது. ஆனால், தற்போதைய திட்டத்தின்படி, அவர்களுக்கு நிதியுதவி கிடைக்காமல் போயுள்ளது என்பதால், இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஏழை, விரிவுபடுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும்.” என்றார்.
அத்துடன், நடப்பாண்டில் இருந்தே, அரசு பள்ளியில் இருந்து கல்லுாரிகளுக்கு சென்று முதல், இரண்டு, மூன்றாவது ஆண்டு படிக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளது. முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் இருந்து சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றதற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க ஏதுவாக பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், இந்த திட்டத்தை அரசு பள்ளி மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்துமாறும் கோரிக்கை எழுந்துள்ளன. அரசு பள்ளிகள் போலவே, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை, எளிய மாணவிகள் பயின்று வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் திருமண நிதியுதவித் திட்டம் கிடைத்து வந்தது. ஆனால், தற்போதைய திட்டத்தின்படி, அவர்களுக்கு நிதியுதவி கிடைக்காமல் போயுள்ளது என்பதால், இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஏழை, விரிவுபடுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.