ஆப்நகரம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி: கல்வி அமைச்சர் புதிய தகவல்!

அனைத்து வகுப்புகளுக்கும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 13 Jan 2021, 1:55 pm
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வேண்டும். மாணவர்கள் விடுதிகளும் செயல்படலாம். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Sengottaiyan


மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற வகுப்பினருக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்தது.

பொங்கல் விடுமுறையில் இப்படியொரு மழையா? - தமிழக மக்கள் ஷாக்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த ஏலூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 6,029 பள்ளிகள் திறக்க தயாராக உள்ளன.

விருப்பமுள்ள 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம். 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டியது அரசின் கடமை. இதையொட்டி நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் மருந்துகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தியேட்டரில் ரிலீஸான வேகத்தில் மாஸ்டரை கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ்
ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம். பொதுத் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் முதலில் பள்ளிக்கு வரட்டும். அதன் பிறகு ஆய்வு செய்து படிப்படியாக பிற வகுப்புகளும் திறக்கப்படும். தமிழக சட்டமன்ற தேர்தல் அட்டவணை வந்த பிறகு, பள்ளி பொதுத்தேர்வு தேதி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி