ஆப்நகரம்

தமிழக கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது? அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

முதல் மற்றும் இரண்டாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 21 Jan 2021, 2:11 pm
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து செப்டம்பர் மாதம் முதல் கல்வி நிலையங்களை படிப்படியாக திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் தள்ளிப் போனது. இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
Samayam Tamil TN Colleges Reopen


உரிய கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள் தெர்மல் ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்படுகின்றனர்.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா; பின்வாங்கினாரா பிரதமர் மோடி?
கல்லூரி வளாகத்திற்குள் முகக்கவசம், போதிய சரீர இடைவெளி ஆகியவை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பிற ஆண்டு மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளின் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

சசிகலா சிகிச்சையில் மர்மம்; வெடிக்கும் புதிய சர்ச்சை!
இதுபற்றி அடுத்த இரண்டு நாட்களில் உரிய முடிவெடுத்து அறிவிக்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்படும். குறிப்பாக ஒரு வகுப்பிற்கு அதிகபட்சம் 30 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படும். ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பழகன் கூறினார்.

அடுத்த செய்தி