ஆப்நகரம்

தமிழகத்தில் முழு ஊரடங்கு எப்போது? வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Mar 2022, 8:05 am
கொரோனா பொது முடக்கத்தால் உலகம் முழுவதும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக கொரோனா நான்காவது அலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tn  full lockdown


சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போதும் அதன் பாதிப்பு முழுவதும் குறைந்தபாடில்லை. உலக நாடுகளில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய போது சீனா தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொண்டு பாதிப்பை குறைத்தது.

இரண்டாண்டுகளுக்கு பின்னர் சீனாவின் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 3400 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வடகிழக்கு நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஷாங்காயில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 19 மாகாணங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை கேட்ட தகவல்: விளக்கம் அளித்த தமிழக அரசு!
சீனாவில் பாதிப்பு அதிகரிப்பதால் இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்கும் என்கிறார்கள். இந்நிலையில் நான்காவது அலை குறித்த அறிவிப்பை இந்திய கொரோனா நிபுணர் குழு தலைவர் வெளியிட்டுள்ளார்.

ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காவது அலை கண்டிப்பாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய கொரோனா நிபுணர் குழு தலைவர் இக்பால் தெரிவித்துள்ளார். மேலும் தொற்று பரவல் முன் எப்போதும் இல்லாத அளவாக இருக்கும் என்றும், ஆனால் பாதிப்பு மிக குறைந்த அளவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
9 முதல் 12ஆம் வகுப்பு - ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கொரோனா மூன்றாவது அலை ஒரு சில வாரங்களில் பெரிய உச்சத்தை எட்டியது. அதிக அளவில் பரவல் இருந்தாலும் முந்தைய அலைகளை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைவாக இருந்தது. அதேபோல் நான்காவது அலையும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு ஆரம்பமாகவுள்ள ஜூன் மாதம் நான்காவது அலை தொடங்கும் என்ற தகவல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி