ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல் எப்போது தெரியுமா? அமைச்சர் சொன்ன பதில்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.

Samayam Tamil 24 Jul 2021, 4:54 pm
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.
Samayam Tamil kn nehru


அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய கே.என்.நேரு, "தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், அதை கடந்த ஆட்சிக் காலத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தால் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் மூன்று நான்கு மாதங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறும்” என்றார்.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் வசதி: புதிய அறிவிப்பு!
உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசிய அவர், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அடிப்படை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, சில நகரங்கள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. சில பகுதிகளில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். தமிழ்நாட்டில் பருவமழை காலம் என்பதால், அது நிறைவு பெற்றதும் தேர்தல் பணிகள் தொடங்கும்” என அவர் கூறினார்.

அடுத்த செய்தி