ஆப்நகரம்

தியேட்டர்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பா? - அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 11 Sep 2020, 5:34 pm
கோயில் திறப்பு, பொது போக்குவரத்துக்கு அனுமதி என தமிழகத்தில் பல்வேறு பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், திரையரங்குகளை திறக்க மட்டும் இதுவரை அரசு அனுமதி அளிக்கவில்லை.
Samayam Tamil theatres


இந்த நிலையில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வருவாயை பகிர்வதில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினருடன் ஏற்பட்டுள்ள பிர்ச்சினையின் காரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், ஒலிக்பிக் போட்டிகளை ஒளிபரப்ப திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, தமிழக செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

சினிமா தியேட்டர்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு?

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க சாத்தியம் உள்ளனவற்றுக்கு மட்டுமே பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்களில் அதிகபட்சம் அரை நேரத்துக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.

ஆனால், திரையரங்குகளில் பார்வையாளர்கள் மூன்று மணி நேரம் இருக்க வேண்டியுள்ளது. எனவே அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாதபட்சத்தில் நிலைமை சிக்கலாகிவிடும் அபாயம் உள்ளது. திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 8 ஆம் தேதி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துள்ளது.

போஸ்டர் அடிக்க வேண்டாம்: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு

மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்களுடன், தமிழகத்தில் கொரோனா நிலவரம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற பிறகே, திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

திரையரங்குகளை திறப்பது குறித்தே இன்னும் முடிவு எடுக்கப்படாத நிலையில், தியேட்டர்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பது தொடர்பாக தற்போது பேசியது சரியாக இருக்காது. அதற்கு அனுமதியளிக்க தற்போதைக்கு வாய்ப்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி