ஆப்நகரம்

அதிமுகவை முடக்க திமுக - பாஜக சீக்ரெட் டீல்? - ர.ர.,க்கள் ஷாக்!

அதிமுகவை முடக்க திமுக - பாஜக ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளதா? என, முன்னாள் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்

Samayam Tamil 13 Aug 2022, 4:53 pm
அதிமுகவை முடக்க திமுக - பாஜக ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளதா? என, அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
Samayam Tamil whether dmk and bjp is secret alliance to freeze aiadmk questions ex mp kc palanisamy
அதிமுகவை முடக்க திமுக - பாஜக சீக்ரெட் டீல்? - ர.ர.,க்கள் ஷாக்!




​ஒற்றைத் தலைமை!

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம், கடந்த மாதம் 11 ஆம் தேதி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்

​ஓபிஎஸ் எதிர்ப்பு!

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார்.

சோகத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கி, புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் பிளவுபட்டு கிடப்பது, தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

திமுக - பாஜக ரகசிய ஒப்பந்தம்?

அதிமுகவை முடக்க பாஜக வேலைப் பார்த்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதிமுகவை முடக்க, திமுக - பாஜக ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதா? என, அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

​கே.சி.பழனிசாமி கேள்வி!

இது குறித்து அவர் கூறுகையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை திடீரென்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்ட காரணம் என்ன? அதிமுகவை முடக்க திமுக - பாஜக மறைமுக ஒப்பந்தமா?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்

​ஸ்டாலினுக்கு அண்ணாமலை பாராட்டு!

போதைப் பொருள் ஒழிப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பாராட்டு தெரிவித்து இருந்தார். மேலும் அண்ணாமலையின் பாராட்டு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான "முரசொலி"யில் செய்தியாகவும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து கே.சி.பழனிசாமி இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி