ஆப்நகரம்

சசிகலாவுக்கு சிக்கல்: அந்த இடத்துக்கே மீண்டும் செல்கிறாரா?

பெங்களூர் சிறை வழக்கில் சசிகலாவுக்கு மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளதாக கூறுகிறார்கள்.

Samayam Tamil 9 Feb 2022, 12:21 pm
சசிகலா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்டது. அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் அதில் அவருக்கு குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
Samayam Tamil VK Sasikala


இந்த சூழலில் பெங்களூர் சிறை வழக்கு சூடுபிடித்துள்ளது. சிறையில் இருக்கும்போது சசிகலாவிற்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சிறப்பு சலுகைகள் வாங்கப்பட்டது உண்மை என கர்நாடக அரசு நியமனம் செய்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினோத்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஏசிபி என்ற ஊழல் ஒழிப்பு பிரிவில் 2018ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
ஸ்டாலினுக்கு இப்படியொரு ஷாக்: நேரம் பார்த்து இறங்கும் கத்தி!
இதனைத்தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சசிகலாவிடம் லஞ்சம் பெற்றதாக தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, காவலர் சுரேஷ், கஜராஜ் மகனுார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இதுகுறித்து ஜனவரி 7ஆம் தேதி இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு!
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சசிகலா, இளவரசி ஆகியோர் குறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பேசிய ஐஜி ரூபா, “அரசின் எந்த அதிகாரியாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். லஞ்சம் பெற்றவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் உண்மை நிலைநாட்டப்படும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி